உலக புகைப்படப் பிடிப்பாளர் தின நிகழ்வு கிளிநொச்சியில்!

உலக புகைப்படப் பிடிப்பாளர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது படப்பிடிப்பாளர் சங்கத்தினால் கௌரவிப்பும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஸ்ரீதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், படப்பிடிப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *