மலேசியாவில் சட்டவிரோதமாக வெளிநாட்டினரை கடத்தி வந்த ஆட்கடத்தல்காரர்கள் கைது!

மலேசியாவின் Damansara-Puchong நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் முறையான ஆவணங்களின்றி 9 வெளிநாட்டினரை அழைத்துச் சென்ற ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி இந்த நெடுஞ்சாலையில் Penchala எனும் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது, வெளிநாட்டினர் பலர் அக்காரில் கூட்டமாக இருந்ததை கண்டிருக்கின்றனர். பின்னர், காரின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த மறுத்த நிலையில் 5 கிலோ மீட்டர் தூரம் காவல்துறையினர் அக்காரை விரட்டி பிடித்திருக்கின்றனர். 

“இரண்டு சந்தேக நபர்கள் காரிலிருந்து குதித்து தப்ப முயன்றனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். வாகனத்தை சோதித்த பொழுது அதில் இருந்த வெளிநாட்டைச் சேர்ந்த 8 ஆண்கள், 1 பெண் கண்டறியப்பட்டனர்.

மலேசியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக இவர்கள் மலேசியாவுக்குள் கடத்தி வரப்பட்டிருக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *