தனது 15 வயது மகளுடன் 2 வருடங்களாக பாலியல் உறவில் ஈடுபட்ட தந்தை கைது!

தனது 15 வயது மகளுடன் இரண்டு வருடங்களாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார் என கூறப்படும 48 வயது தந்தை ஒருவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிமன்ற நீதிவான் நிலந்த உத்தரவிட்டார்

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தையின் நடத்தை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது தாயிடம் கூறியபோதும், தாய் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

அதையடுத்தே மேற்படி சம்பவம் குறித்து தனது வகுப்பாசிரியரிடம் கூறியதாகவும், ஆசிரியை இது குறித்து சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்ததாகவும் சிறுமி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்படி சம்பவம் குறித்து நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்தே, சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படு்த்தியபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *