யாழில் இடம்பெற்ற ஒரு நிமிடப் போராட்டம்

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் ஒரு நிமிட விசித்திர கவனயீர்ப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக மதியம் 1.20 மணிக்கு ஒன்று கூடிய வங்கி ஊழியர்கள் பதாகைகளை தாங்கியிருந்ததுடன் மதியம்1.21க்கு கலைந்து சென்றனர்.

இலங்கை வங்கித் தலைவர் மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றார் சட்டம் எங்கே?,
பொதுமக்கள் பணத்தை பாதுகாக்குக – இலங்கை வங்கித் தலைவரின் மோசடிகரமான கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படுத்துக ,இலங்கை வங்கித் தலைவரின் மோசடிகரமான கொடுக்கல் வாங்கல்கள்
தொடர்பான விசாரணைக்காக தடயவியல் கணக்காய்வொன்றை ஆரம்பிக்குக போன்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *