
கொழும்பு,ஓக 24
பலாங்கொட காசியப்ப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலரி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (24) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வந்த போதே காசியப்ப தேரர் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.