யாழில் வழிப்பறிக் கொள்ளை:இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளை மற்றும் திருட்டுகளில் ஈடுபட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினரின் தகவலின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த 22,23 வயதுடைய இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை திருநெல்வேலி சந்தைக்கு பின்புறமாக பாடசாலை வீதியில் பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியை அபகரித்து தப்பித்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அண்மையில் யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களினால் திருடப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களுக்கு பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதுடன் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *