சர்வதேச நிறுவனங்களிடம் முறையிடும் பஸ் உரிமையாளர்கள்

கொழும்பு, ஓக 25

கடந்த மே மாதம் 9ஆம் திகதி தனியார் பேருந்துகள் எரிக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சர்வதேச நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்துள்ளது.

குறித்த பஸ்கள் அழிக்கப்பட்டமையினால் தற்போது குறித்த பஸ் உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

விசாரணை நடத்தி பஸ் உரிமையாளர்களுக்கு நீதி வழங்குமாறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

Leave a Reply