30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க நடவடிக்கை?

புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னதாக 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியை ந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்தநிலையில் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் அடுத்த வாரம் அல்லது செப்டெம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *