சுன்னாகத்தில் மின் கம்பிகளை திருடியவர் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து மின் கம்பிகளை களவாடி சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சார நிலைய வளாகத்தில் இருந்து பெருந்தொகையான மின் கம்பிகள் களவாடப்பட்டுள்ளதாக சுன்னாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்நிலையில் சுன்னாகம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த பட்டா ரக வாகனத்தை பொலிஸார் மறித்து சோதனையிட்டனர்.

அதன் போது வாகனத்தினுள் மூடை மூடையாக மின் கம்பிகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த நிறை 93 கீலோ என கணக்கிடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து வாகன சாரதியான சுன்னாகம் பகுதியை சேர்ந்தவரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *