
கந்தானை – கப்புவத்த பகுதியில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த, சம்பவத்தில் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலும்,பெண் ஒருவர் நடத்தும் ஹோட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் உணவு வாங்கிவிட்டு பணம் கொடுத்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் குறித்த நபர் ஹோட்டல் உரிமையாளரின் தந்தையை பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த,இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ராகம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதக்க தெரிவிக்கப்படுகின்றது.
பிற செய்திகள்