எல்லை தாண்டிய மீன்பிடி: இந்திய மீனவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

கடந்த 10ம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு- திருகோணமலை எல்லை கடற்பரப்பில் வைத்து தமிழக 9 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதாகிய தமிழக மீனவர்களை 11ம் திகதி திருகோணமலை நீதிமன்றில் நீரியல்வளத்துறை அதிகாரிகளால் முற்படுத்தப்பட்டனர்.

இதன் போது மீனவர்களை இன்று 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இன்று குறித்த வழக்கு இணையவழி காணொளி மூலம் விசாரணை செய்த நீதவான் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மீனவர்களை மன்றில் முற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நாளைய தினம் மன்றில் முற்படுத்தப்படும் மீனவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *