நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்த இலங்கையின் நிலைமையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அமைப்புக்கள் வழங்கிய தகவல்களின்படி எதிர்காலத்தில் கடன்களை பெற்றுக்கொள்ள வசதியாக இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.