வடமராட்சியில் சிம்பன்சி குரங்கின் உடல் எனக் கருதி கரை ஒதுங்கிய மனித உடலம் புதைப்பு? புதிய சர்ச்சை கிளம்பியது

வடமராட்சி – கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் சின்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி பொலிஸார் புதைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக கரை ஒதுங்கிய சடலத்தை பொலிஸார் புதைத்துள்ளனரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

மருத்துவர் என கூறப்படுபவரின் அறிவுறுத்தலில் சின்பன்சி குரங்கின் சடலம் என அந்தச் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி கடற்பரப்பில் அண்மையில் 5 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என்றும் அவை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவை தொடர்பில் தகவல்கள் கிடைக்காதமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் மணற்காடு கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் நீதிமன்றுக்கு தகவல் வழங்கப்படாமல் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளின் சடலம் மீட்கப்பட்டாலும் நீதிவானின் அனுமதியுடன் கால்நடை வைத்திய அதிகாரியின் விசாரணைக்கு உள்படுத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இடதுசாரி சிந்தனையுள்ள மக்களாட்சியை உருவாக்குவதன் மூலமே நாட்டை முன்கொண்டு செல்ல முடியும்! மஹிந்த ஜயசிங்க

Leave a Reply