
மாகாண சபை முறைமை கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் அவை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. எனவே, 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை காண வேண்டுமாயின் 13 ஆம் திருத்தத்தை முழு அதிகாரங்களுடன் முழுமையாக அமுல்படுத்துங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.