இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 75வதுஆண்டுத் தொடக்க விழா நாளையதினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழரசுக் கட்சியின் 75வதுஆண்டுத் தொடக்க விழா நாளை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணிம் பத்மநாதன் கலந்துகொள்ளவுள்ளார்.