
அது கடந்த நவம்பர் 18 ஆம் திகதி. பொரளை – கொட்டா வீதியில் அமையப் பெற்றுள்ள ‘வெஸ்டேர்ன்’ தனியார் வைத்தியசாலையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. தமது சிறுநீரக நன்கொடை நிதி தொடர்பில் கிடைக்க வேண்டிய உபகாரத் தொகை கிடைக்கவில்லை எனவும் அதனை பெற்றுத் தருமாறும் ஒரு குழு முன்னெடுத்த எதிர்ப்புகள் இதற்கு காரணமாகும்.