யாழ். பண்ணை பாலத்தருகில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், கொக்குவில் கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதன்போது சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டி உயிரிழந்தார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *