<!–
வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சையளிப்பதற்கான இடவசதி இல்லை எனப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 கட்டில்களில் 63 கட்டில்கள் மாத்திரமே நிரம்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் வைத்தியசாலையில் பிராணவாயுவின் தேவை தற்போதைய அளவைவிட அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.