இலங்கை மக்கள் சோம்பேறிகளென திட்டும் ஆளும் கட்சி எம்.பி

அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களும் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரியா போன்ற நாட்டில் அதிக நேரம் வேலை செய்து நம் நாட்டிற்கு பணம் அனுப்புகின்றனர். வெளி நாட்களில் மக்கள் அதிக நேரம் உழைக்கின்றனர். ஆனால் இங்கு உள்ளவர்கள் நன்கு உறங்கி விட்டு பொழுதை கழிக்கின்றனர்.

அதிக நேரத்தை வீணடிக்கும் நாடு இலங்கை. நாட்டின் வீழ்ச்சிக்கு அனைவரும் பதில் கூற வேண்டும்.

நாம் நன்கு அறிந்த விடயம் நாட்டில் உள்ள பல வித பிரச்சனைகள் குறித்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஆனால் இங்கு பார்தால் அரசாங்கம் எல்லோரையும் ஏமாற்றுகிறது, எனவே வேற ஒரு ஆட்சி வர வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

வேலை நிறுத்தம், போராட்டம் நடத்தினால் மீண்டும் ஒரு கொரோனா அலையை முகம்கொடுக்க நேரிடும்.

இல்லை என்றால் வேலை நிறுத்தம் கண்டிப்பாக மேற்கொண்டால் அவர்களிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply