மகிந்தவிடம் தன் கைவரிசையை காட்டிய நபருக்கு நேர்ந்த அவலம்

பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து பல மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

பிரதமரின் செயலாளராக கடந்த வருடம் நியமிக்கப்பட்ட நபரே இந்த மோசடியை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பிரதமர் எதிர்க்கட்சி தலைவராக விளங்கிய காலப்பகுதியிலேயே அவரின் செயலாளராக செயற்பட்டார்.

அரச வங்கியில் உள்ள பிரதமரின் வங்கிக் கணக்கிற்கான ஏ.டி.எம். கார்ட் அவரிடம் வழங்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த ஏ.டி.எம். கார்ட்டினை பயன்படுத்தி பிரதமரின் வங்கிக் கணக்கில் அவர் மோசடி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply