பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து – பலர் காயம்! samugammedia

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று தெமோதர நீர்வேலிக்கு அருகில் கவிழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த பஸ்  பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த பல பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *