புனர்வாழ்வு நிலையம் திடீர் சுற்றிவளைப்பு – இருவர் கைது! 34 பேருக்கு நேர்ந்த கதி..! samugammedia

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.

தெஹிவளை – மல்வத்தை வீதி பகுதியில் இயங்கி வந்த இந்நிலையம் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையில் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, சட்ட விரோதமாக நிலையத்தை நடத்தி வந்தார் எனக் கூறப்படும்   அவருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையத்தில் 34 பேர் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில், அவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகள்  கூட இல்லை என சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இந்த நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் நபர்கள் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 50 மற்றும் 51 வயதுடைய தெஹிவளை மற்றும் பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *