எல்ல – வெல்லவாய வீதியில் கரடகொல்ல பிரதேசத்தில் இன்று காலை பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் உள்ள உமாஓயா அபிவிருத்தித் திட்ட அலுவலகத்தைச் சேர்ந்த பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் பஸ்ஸின் சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.