வவுனியா மண்ணின் சாதனை மாணவிக்கு அரசாங்க அதிபர் பாராட்டு! samugammedia

கனிஷ்ட பொதுநலவாய போட்டி தொடரில் பளு தூக்கும் போட்டிகளில் மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்ட மாணவி கோசியா திருமேனனுக்கு அரசாங்க அதிபர் தனது பாராட்டினை தெரிவித்தமையுடன் சிறு அன்பளிப்பும் வழங்கி வைத்தார்.

34 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய கனிஷ்ட பொதுநலவாய போட்டி தொடரில் பளு தூக்கும் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 18 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வீராங்கனைகளினால் வெல்லப்பட்டுள்ளன.

வவுனியா மாவடத்தினை சேர்ந்த 14 வயதான கோசியா திருமேனன், 16 வயதுக்குட்பட்ட 40 கிலோ எடை பிரிவில்  92 கிலோ கிராம் எடையை தூக்கியதன் மூலம் 3ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

குறித்த மாணவியை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு வரவளைத்து தனது பாராட்டினை தெரிவித்தமையுடன் சிறு அன்பளிப்பும் வழங்கி வைத்தமையுடன் மாவட்ட செயலக ஏனைய அதிகாரிகளும் தமது வாழ்த்துக்களை மாணவிக்கு தெரிவித்திருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *