
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புடனான பேச்சுவர்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அரசியல் தீர்வுக்கான அதிகார பகிர்வு பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக எமது அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு தீமானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமத் தெரிவித்தார்.





