மாண்புமிகு மலையக மக்கள் எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவிலிருந்து பேரணி samugammedia

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள  தலைமன்னார் முதல்  மாத்தளை வரையிலான மலையக எழுச்சி  பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவில் இருந்தும் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு நகரப் பகுதியில்  இருந்து 2 ஆம் திகதி புதன்கிழமை (02/08/2023) காலை 9 மணிக்கு குறித்த ஆதரவு நடை பயணம் ஆரம்பமாகும்

புதுக்குடியிருப்பு  சந்தியில் இருந்து கைவேலி வரை நடைபயணம் நடைபெறும் இதனைத் தொடர்ந்து கைவேலியில் இருந்து வாகன பேரணியாக உடையார் கட்டு சென்று உடையார்கட்டு நகரப் பகுதியில் நடை பயணம் இடம்பெறும்.

இதனை அடுத்து உடையார் கட்டில் இருந்து வாகனப் பேரணியாக தேராவில் சென்று தேராவிலில்  இருந்து ரெட்பானா வரை நடை பயணம் இடம்பெறும்.  இதனை அடுத்து ரெட் பானாவில் இருந்து வாகன பேரணியாக சென்று விசுவமடு நகரப் பகுதியில் நடை பயணம் இடம் பெறும்.

இதனை அடுத்து விசுவமடுவில் இருந்து வாகனப் பேரணியாக சென்று தர்மபுரம் நகரப் பகுதியில் நடை பயணம் இடம்பெறும்.

இதனை அடுத்து தர்மபுரத்தில் இருந்து வாகனப் பேரணியாக சென்று புளியம்பொக்கனை சந்தியில் நடைப் பயணம் இடம்பெறும்.

இதனை அடுத்து புளியம்பொக்கனை சந்தியில் இருந்து வாகன  பேரணியாக சென்று பரந்தன் நகரப் பகுதியில் நடை பயணம் இடம் பெறும்.

இதனை அடுத்து பரந்தனில் இருந்து வாகனப் பேரணியாக சென்று கரடிப்போக்கு சந்தியில் இருந்து கிளிநொச்சி டிப்போ சந்தி வரை நடைப் பயணம் இடம் பெறும். அன்று இரவு கிளிநொச்சி கருணா இல்லத்தில் ஓய்வு பெறும் இந்த நடை பயணம் 

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு மலையக எழுச்சி பயண வட மாகாண ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 3 ஆம் திகதி வியாழக்கிழமை (03/08/2023) மாண்புமிகு மலையகம் யாழ். சிவில் சமூகம் ஏற்பாடு செய்துள்ள ஆதரவுப் பேரணியொன்று யாழ்ப்பாணம் பஸ்தரிப்பிடத்தில்  இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *