யாழில் ஆண்களுடன் தகாத உறவில் இளம் குடும்ப பெண்; பலருக்கு சிக்கல்! samugammedia

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை பாலியல் தொற்றுநோய்யுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

திருமணமான 23 வயதான இளம் பெண்ணே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை, சாரையடி பகுதியில் நேற்றையதினம் (31) அதிகாலை 1 மணியளவில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த இந்த இளம்பெண், பருத்தித்துறையில் நண்பியொருவருடன் தங்கியுள்ளார். 

குறித்த பெண் சமூகப் பிறழ்வில் ஈடுபடுகிறார் என்ற முறைப்பாடு பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்து, இரண்டு முறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் மீண்டும் சமூகப்பிறழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். முச்சக்கர வண்டியொன்றுடன் அவர் நின்றபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைதான பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 வயதில் அவருக்கு குழந்தையுள்ளது. இந்நிலையில் மனைவியின் தகாத நடத்தையை அறிந்த கணவர் பிரிந்து சென்று விட்டார்.

தனது பிள்ளை தற்போது மாமனாரின் பராமரிப்பில் இருப்பதாக கைதான பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு முறை எச்சரித்தும் திருந்தாமல் சமூகப்பிறழ்வில் ஈடுபட்டதால், அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்து, பாலியல் தொற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறாரா என பரிசோதிக்க வேண்டுமென பருத்தித்துறை பொலிசார் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *