இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதியொருவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ” காக்கா முட்டை” படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் “புது வேதம்”.
புது வேதம் ராசா விக்ரம் இயக்குகிறார். இந்த படத்தில் விக்னேஷ் ஜோடியாக இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வருணிகா நடிக்கிறார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வருணிகா இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறி குடும்பத்துடன் இந்தியாவில் வசித்து வருகின்றார்.
நடிப்பு மீது ஆசை கொண்ட வருணிகா சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
இப்போது புதுவேதம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
சென்னையில் உள்ள குப்பை மேடுகளில் வாழும் மக்களை பற்றிய கதை இது. இதில் அவர் அந்த பகுதியில் வாழும் ஏழைப் பெண்ணாக நடித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த படம் அடுத்த மாதம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாண யுவதி நடிக்கும் திரைப்படைத்தை பார்க்க யாழ்ப்பாணிஸ்கள் காத்திருக்கின்றனர்.