கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த வைத்தியர்! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் samugammedia

மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக வீட்டிலேயே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த வைத்தியர் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார். 

தன்னுடைய இந்த தற்கொலை தீர்மானத்துக்காக எவரையும் சந்தேகிக்க வேண்டாம் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான வேறு காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனையின் போது தற்கொலை செய்துக்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *