வவுனியா இளைஞர் கொழும்பில் படுகொலை..!நடந்தது என்ன ..!samugammedia

கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு மோதரையில் நேற்று(18) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்தவரும் வெல்லம்பிட்டியில் வசிப்பவருமான அருணாசலம் அஜந்தன் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த 5 வருடங்களாகக் குடும்பத்தினருடன் தங்கி நின்று வேலை புரியும் குறித்த இளைஞர், நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *