பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பல நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்காத மாணவர்களுக்கிடையிலான தற்கொலைகள் தொடர்பில் ஒப்பீட்டு தரவு பகுப்பாய்வு நடத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவித்தார்.