சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்பு…! முல்லையில் சட்டத்தரணிகள் போராட்டம்…!samugammedia

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்ளிக்குட்படுத்தும் வகையிலும்  சரத் வீரசேகர  பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் நாளையதினம்(25) முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினரால் அடையாள கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நாளை(25) காலை 09.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்த முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் இன்றையதினம் ஏகமனதாக தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் எனைய கிளைச்சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையான கண்டனப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *