நீதித்துறையை அடக்காதே…! சரத்வீரசேகரவுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம்…!samugammedia

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை இன்று(25)  முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டமானது இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்து  இன்றையதினம் வடக்கு  மாகாணத்தின் நீதிமன்றங்களின் முன்னால் சட்டத்தரணிகள்  கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply