ஜனாதிபதி சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் அமைந்துள்ள வன்னிவிழிப்புலனற்றோர் சங்கத்தின் அலுவலக வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்பொழுது அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை மற்றும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைசுடரும் ஏற்றப்பட்டது.
தொடர்சியாக கௌரி சங்கரி தவராசாவின் ஆவணப்படமும் காட்சிபடுத்தப்பட்டது.
இதன் தொடர்சியாக விழிப்புலனற்றோருக்கான உணவுப் பொதிகள் மற்றும் பொருண்மியம் நலிந்த மாணவர்களுக்கான காலணியும் கௌரி சங்கரி தவராசாவின் ஞாபகார்த்த அறக்கட்டளையினால் வழங்கபட்டது
இதன்பொழுது ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்,வன்னி லழிப்புலனற்றோர் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.