யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைந்துள்ள, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடமானது வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03) ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களின் பங்கேற்புடன் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரினால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.