பஸ்ஸிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழப்பு..! இலங்கையில் கொடூரச் சம்பவம்! samugammedia

 

கதுருவெலயிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கீழே தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ் கிரித்தல குளத்துக்கு அருகில் உள்ள வளைவில் சென்றுகொண்டிருந்தபோதே அவர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த குறித்த பெண்ணை  பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மின்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்வர்ணலதா என்ற 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து பஸ் சாரதி மின்னேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *