யாழில் மீட்டர் வட்டி மாபியாக்கள் அதிகரிப்பு….!தகவல் தந்தால் நடவடிக்கை…! பொலிஸார் அறிவிப்பு…!samugammedia

யாழ் மாவட்டத்தில் மீற்றர் வட்டிக்குப் பணம் கொடுப்பது, வட்டி கோரி மிரட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்கவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீற்றர் வட்டிக்குப் பணம் கொடுப்பது, வட்டி கோரி மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வட்டிக்காக சொத்துகளை மிரட்டிப் பறிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன என்று கூறப்படுகின்றது. 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் தகவல்களை வழங்கினால் துரிதகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தகவல்களை யாழ்ப்பாணத்தில் உள்ள எனது அலுவலகத்திலோ அல்லது எனக்கோ தெரிவிக்க முடியும் என்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *