யாழ் தெல்லிப்பழை பகுதியில் பதற்றம் – STF குவிப்பு! samugammedia

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் ரக வேனில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த 26 வயதான இளைஞர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வாள்வெட்டு குழு மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சிசிரிவி காணொளிகளை கொண்டு வன்முறைக் கும்பலை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு வேளையிலும் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டு குழுவிற்குள் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த வாள்வெட்டு குழுவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *