சுதந்திர கட்சிக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் சந்திரிக்கா..! மைத்திரிபால குற்றச்சாட்டு

 

ஶ்ரீங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

சுதந்திரக் கட்சியை அரசாங்கத்துடன் இணையச் செய்யும் நோக்கில் தாம் தலைமைப் பதவியில் நீடிப்பதனை தடுக்க நீதிமன்றின் உதவி நாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சதி திட்டத்தின் பின்னணியில் சந்திரிக்கா செயற்பட்டு வருவதாக மைத்திரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மீண்டும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்து உண்மை நிலைமையை நீதிமன்றில் எடுத்துரைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *