திருமலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு…! நாசமான பல இலட்சங்கள்…!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று வீட்டை பூட்டி விட்டு திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்னாலுள்ள தனது கடையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீடு தீப்பற்றி  எரிந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இந் நிலையில் உடனடியாக பொலிஸ் அவசரப் பிரிவு மற்றும் தீயணைப்பு பிரிவுக்கும் அறிவித்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். 

குறித்த தீ விபத்தில் பல பெறுமதியான வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த வீடு தீப்பற்றியமை தொடர்பில்  தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply