வாகன சாரதிகளே அவதானம்…! நாளை முதல் அமுலுக்கு…! பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!

காலி வீதி உள்ளிட்ட பல கொழும்பு வீதிகளில் நாளை(07) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள போரா சமூகத்தின் வருடாந்திர ஆன்மிக மாநாட்டினை முன்னிட்டே  விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 15,000 பேர் பங்கேற்க உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் DIG சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Leave a Reply