இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்க இந்திய வங்கி அனுமதி

கொழும்பு, மார்ச் 11

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதியளித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்தக் கடனில் குறைந்தது 75% பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் மீதமுள்ள 25% இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளிடமிருந்து கொள்வனவுகளை மேற்கொள்ளப்  பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply