யாழ்ப்பாணம் – ஏழாலை சிவகுரு வீதியில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் நடந்த நிலையில், சம்பவ இடத்திற்குள் நுழைந்த பொலிஸாரால் சந்தேகநபர் அங்கிருந்து தப்பி ஓடியபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றனர்.
அத்துடன், தப்பி ஓடும்போது மதில் பாய்ந்ததால் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றனர்.





