சமையல் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு வழங்கி, தமது தொழிலை முன்னெடுத்து செல்ல இடமளிக்கப்படாத பட்சத்தில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உணவக பொருட்களை கொண்டு வந்து, விறகு அடுப்பில் கொத்து தயாரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர்களை உரிய வகையில் விநியோகிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.






