ஜனாதிபதி பதவி விலகவுள்ளாரா?

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பதிவுகள் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இது போன்றதொரு நெருக்கடியான சூழ்நிலையில் தப்பிச் செல்லும் நபர் ஜனாதிபதி அல்லவெனவும், தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருவதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply