இலங்கை மக்களின் நலனுக்காக பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்படவேண்டும்! – ராஜித

ஜே ஆர் ஜெயவர்த்தன கெட்ட மனிதர் என்று கூறும் அரசியல் கட்சி அவரின் சட்ட நடைமுறைகளை மாத்திரம் சிறந்தது என்று கூறுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,

ஜே ஆர் கெட்டவர் என்று கூறும் ஒரு அரசியல் கட்சி, அவரின் திறந்த பொருளாதாரம், நிறைவேற்று ஜனாதிபதி முறை பயங்கரவாத தடைச்சட்டம், தேர்தல் முறை என்பன சிறந்தது என்று கூறி அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டபோது பிள்ளையின் வாயில் கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டே பெறப்பட்டது.

இந்நிலையில் சர்வதேசத்துக்கு காட்டுவதற்காக மாத்திரமல்லாமல், இலங்கையின் மக்களின் நலனுக்காக இந்த சட்டம் திருத்தப்படவேண்டும் என்று ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

Leave a Reply