இயக்குனர் பாலாவுடன் இணையும் சூர்யா!

நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, ‘என்னுடைய குரு பாலா அண்ணா ஆக்சன் என சொல்வதற்காக இத்தனை நாளாக காத்திருந்தேன்.  18 ஆண்டுகளுக்கு பிறகு அது நடந்திருக்கிறது. உங்களுடைய வாழ்த்துக்கள் தேவை’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply