
திருகோணமலை – அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முதியான்சாலாகே குணதிலக்க பண்டார யகம்பத் வயது (48) உயிரிழந்துள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (1) மாலை இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனமும், காரும் மோதியே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியிலிருந்து கந்தளாய் பகுதிக்குச் சென்ற காரும் கந்தளாயில் இருந்து கபரனைக்குச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு விபத்துத்துக்குள்ளாகியுள்ளது.
விடுமுறையில் சென்று திரும்பி வரும் போதே, விபத்துக்குள்ளாகி அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





