கோட்டாவின் முகத்தில் அறைந்த அனுர

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை, முகத்தில் அறைந்தது போல் பதில் அளித்து மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) நிராகரித்துள்ளது.

ஜனாதிபதியினால் வழங்கப்படும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்க கட்சி மறுப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

எந்தவொரு இடைக்கால, குறுகிய கால அல்லது அனைத்துக் கட்சி அரசாங்கக் கட்டமைப்பை அமைப்பதில் அவர்கள் ஜனாதிபதி அல்லது பிரதமருடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று கட்சி கருதுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில் தனது பதவி விலகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, இந்த நெருக்கடியை நிர்வகிப்பதற்கான ஒரு அமைப்பைப் பற்றி விவாதிக்கலாம். அப்போது தேர்தல் நடத்தி, பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசை நியமிக்கலாம்,” என்றார்.

Leave a Reply