
ஒலிம்பிக் பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிஆர் பரிசோதனைகளின் முடிவையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது இரண்டு குழந்தைகளும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.





